மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நடிகர் சங்க தேர்தல், காலதாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்ன உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த ஆண்டு (2019) ஜூன் மாதம் 23ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டி யிட்டன. தேர்தலில், தபால் வாக்குகளைச் செலுத்த அனுமதிக்கவில்லை என்று கூறி, பாக்யராஜ் அணியைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து.

இந்த வழக்கை விசாரித்து வந்த தனி நீதி நீதிபதி கல்யாணசுந்தரம், ஜனவரி 24ந்தேதி , தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக் காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது என கூறியிருந்தார். மேலும் புதிய தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை தமிழதனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில், தமிழகத்தில் பல்வேறு சங்கங்களின் பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகளே நிர்வகித்து வருகின்றனர், ஏற்கனவே இதுபோல தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலமுறை தேர்தல் நடத்தப்படாமல், பதவிக்காலம் முடிந்த பிறகும், முந்தைய நிர்வாகிகளே சங்கத்தை நிர்வகித்து வந்துள்ளனர். ஆனால், தற்போது, தமிழக அரசு நடிகர் சங்கப் பிரச்சனையில், நடுநிலையோடு நடந்து கொள்ளாமல், ஒருதரப்பு சார்பாக நடந்து கொண்டு வருகிறது, இந்த விவகாரத்தில், தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.க அரசு நியமித்தது.

இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையடுத்து நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையைத் தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. *உயர்நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக்கூடாது என தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேர்தலை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தது.

இந்நிலையில் விஷால் மேல்முறையீடு செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது. மேலும் இதுதொடர்பாக ஏப்ரல் 8-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.