டெல்லி: சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்தியஅமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், . நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள தன்னை அனுமதிக்கக் கோரி  மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் தற்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது செயலாளர் உள்பட  3 போர் புகார் கூறியுள்ளார்.

மத்திய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருப்பதற்கான விகிதம் ரூ .1 கோடி என்று தெரிவித்த ஸ்மிருதி இரானி, பின்னர் தனக்கு உறுதியளித்ததன் மூலம் ரூ .25 லட்சம் செலுத்துமாறு கோரப்பட்டதாக  அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமைச்சர் மற்றும்  அவரது நெருங்கிய தொடர்புகளால் தான் தவறாக வழிநடத்தப்பட்டதாக வர்திகா சிங் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தவிர, ஸ்மிருதியின் தொடர்புகளில்  இருக்கும் ஒருவர், தன்னை  சமூக ஊடகங்களில் அவதூறாக பேசியதாகவும் குற்றம் சாட்டினார்.