சென்னை:

சென்னை விமானநிலையத்தில் இணையதள சேவை திடீர் முடக்கம் ஏற்பட்டதால், விமானம் புறப்படும் மற்றும் இறங்கும் நேரம் தெரியாமல்  பயணிகள் அவதி அடைந்தனர்.

சென்னைனையில் விமான பயணிகளின் அதிகரிப்பை தொடர்ந்து,  உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு முனையம் ஆகிய 2 விமான நிலையங்கள் மீனம்பாக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை 5 மணி அளவில்  இணைய தள சேவையில்  திடீர் முடக்கம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இணையவழி பயணச்சீட்டு கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. அதுபோல, விமானங்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் தெரியாமல் பயணிகள் அவதி பட்டனர்.

இணையதள சேவை முடக்கம் காரணமாக பல விமானங்கள், உரிய நேரத்தில் புறப்படாமல் தாமதமாக புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.