புதுடெல்லி:
விவசாயிகள் போராட்டம் நடக்கும் டெல்லி எல்லைப் பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போரட்டம் நடத்திவரும் சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி மற்றும் அவற்றின் அருகிலுள்ள டெல்லி எல்லைப்பகுதிகளில் இணைய சேவைகளை நாளை (ஜனவரி 31) இரவு 11 மணி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்தியில் பொது பாதுகாப்பைப் பேணுதல் மற்றும் பொது அவசரநிலையைத் தவிர்ப்பது போன்ற நோக்கங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.