பிரபல மொபைல் போன் நிறுவனமான சூப்பிள்  நிறுவனம்  புதிய வகையான கிரிடிட் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடைபெற்ற  ஆப்பிள் நிறுவன நிழ்ச்சியில்  ஆப்பிள் கிரெடிட் கார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கிரிடிட் கார்டானது நாம் வழக்கமாக உபயோகப்படுத்தும் கிரிடிட் கார்டு போல இல்லாமல் புதிய முறையில்  உருவாக்கப்பட்டு உள்ளது.

ஆப்பிள் கார்டில் என்ன புதுமை உள்ளது… விரிவான தகவல் இதோ…

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள  புதிய கிரெடிட் கார்டினை ‘ஆப்பிள் பே’ பயன்படும் அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தலாம்.

இந்த ஆப்பிள் கார்டில் கிரெடிட் கார்டு நம்பர், சிவிவி எண் உள்பட எந்தவித தகவலும் இடம் பெற்றிருக்காது. ‘ஆனால், ஆப்பிள் கிரெடிட் கார்டு  குறித்த தகவல் அனைத்தும் ஐபோனின் வாலெட் பகுதியில் இடம்பெற்றிருக்கும்.

அதோடு, ஆப்பிள் கிரெடிட் கார்டு கொண்டு பயனர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அவற்றை எங்கு வாங்கினார்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சேகரிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது..

ஆப்பிள் கிரெடிட் கார்டு‌ மூலம் செய்யும் பரிமாற்றங்களுக்கு 2% கேஷ்பேக் வழங்கப்படும். மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை வாங்கினால் 3% கேஷ்பேக் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளையில், கிரெடிட் கார்டு கட்டணத்தை தாமதாக செலுத்தினால் எவ்வித கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் சலுகை வழங்கி உள்ளது.

தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள ஆப்பிள் கார்டு, விரைவில் இந்தியா விலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஆப்பிள் கார்டு தற்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே கார்டை பயன்படுத்த தொடங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.