சென்னை

டல்நலக் குறைவு காரணமாக மறைந்த ஐ என் டி யு சி மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி காளன் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் ஐ என் டி யு சி மாநில தலைவருமான ஜி காளன் கடந்த ஒரு வாரமாக வயது மூப்பு காரணமாக நோய் வாய்ப்பட்டிருந்தார்.  சுமார் 81 வயதாகும் அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ்மனையி சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் மதியம் வீடு திரும்பினார்.

ஆனால் நேற்று மதியம் 3 மணிக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.  இவர் அம்பத்தூர் பிரித்வி பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள துளசி முதல் தெருவில் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.   இவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இவர் உடலுக்கு அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மதியம் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.  இன்று மாலை அவர் உடல் அம்பத்தூரில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  இவர் வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.