யாழ்ப்பாணம்,

லங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட இருக்கும் புத்த விகாரைக்கு புத்த பிட்சுகள் படையெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில வசித்து வரும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாவற்குழி பகுதியில் சட்டவிரோதமாக  புத்த விகாரை ஒன்று அமைக்க அடிக்கட் நாட்டப்பட்டுள்ளது. இந்த விகாரைக்கு புத்த பிட்சுகள் வந்த வண்ணம் உள்ளனர், இன்று அமாவாசையை முன்னிட்டு வழிபாடு நடத்த இலங்கையின் தெற்கு பகுதியை சேர்ந்த 300க்கும் அதிகமான புத்த பிட்சுகள் வருகை தந்துள்ளனர்.

ஏற்கனவே தமிழர்களின் சொந்த நிலத்தில் சிங்களர்கள் அத்துமீறி குடியமர்ந்து வருகின்றனர். தற்போது அந்த இடத்தில் புத்த விகாரை அமைத்து, அதை வழிபட புத்த பிட்சுகள் ஏராளமான பேர் வருகை தருவது, அந்த பகுதியை சிங்கள பகுதியாக மாற்ற முயற்சித்து வருவது தெளிவாகிறது.

ஏற்கனவே நாட்டின் கிழக்கு மற்றும் தென் பகுதியில் புத்த பிட்சுகள், தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில்  இன்று யாழ்ப்பாணத்திற்கு 300 க்கும் அதிகமான புத்த பிட்சுகள் வந்திருப்பது அங்கு வசிக்கும் தமிழர்களிடையே மேலும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.