டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் காவல் மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 3 வரை காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக  அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹார் ஏற்கனவே உத்தரவிட்டி ருந்தார். அதைத்தொடர்ந்து,  டில்லியில் உள்ள திகார் ஜெயிலில் உள்ள 7வது எண்ணைக் கொண்ட ஜெயில் பகுதியில் உள்ள தனி அறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவரது காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் சிபிஐ சிறப்புநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, மேலும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அக்டோபர் 3ந்தேதி வரை சிதம்பரம் மீண்டும் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.