டெல்லி:

சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை  என்று கூறி,  டெல்லி உயர்நீதி மன்றம் ஜாமின் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து உள்ளது.

.என்.எக்ஸ். மீடியா முறைக்கேடு வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில், ப.சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் ஜாமின் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைக்கேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கடந்த 80 நாட்களுக்கும் மேலா திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் சிபிஐ கைது செய்த வழக்கில், உச்சநீதி மன்றம் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியுள்ள நிலையில், அமலாக்கத் துறை கைது செய்துள்ள வழக்கில், இதுவரை அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது.

ஜாமின் கேட்டு சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று  தீர்ப்பு வழங்குவதாக டெல்லி உயர்நீதி மன்றம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், இன்று சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ள உயர்நீதி மன்றம்,  ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் இயற்கையில் தீவிரமானவை என்றும், இந்த முறைகேட்டில் அவர் பங்கு வகித்துள்ளார் என்று தெரிவித்துள்ளது. ஜாமீன் சரியானது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டால் அது பொதுமக்களின் நலனுக்கு எதிரானது. ஆகவே மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறி உள்ளது.