டில்லி:

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ  காவல் மேலும் 5 நாள் நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த 21ந்தேதி இரவு கைது செய்யப்ப்டட நிலையில் 22ந்தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப் பட்டது. இதற்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், ஆகஸ்டு 26ந்தேதி வரை சிபிஐ காவலில் வைக்க நீதி மன்றம் உத்தரவிட்டது.

அவரது சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அதைத்தொடர்ந்து காரசாரமாக  விசாரணை நடைபெற்றது. அப்போது சிதம்பரத்தின் காவல் மேலும் நீடிக்க சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து, பசிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 30ந் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.