சலங்கை துரை இயக்கத்தில் உருவாகி வரும் “இ.பி.கோ 302” திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை கஸ்தூரி நடிக்கிறார்.

தண்டபாணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முத்துவிஜயன் இசையமைக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்ற வலுவான கதாபாத்திரத்தின் மூலம் முதன்முறையாக போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.