புனே

பிஎல் 2018இன் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டில்லி டேர் டெவில்ஸ் அணியை வென்றது.

நேற்று புனேவில் ஐபிஎல் 2018 இன் 30 ஆவது லீக் போட்டி புனேயில் நடைபெற்றது.   இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டில்லி டேர் டெவில்ஸ் அணியும் போட்டியிட்டன.   டாஸ் வென்ற டில்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.    முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்திருந்தது.

அடுத்து விளையாடிய டில்லி அணி எவ்வளவோ போராடியும் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது.   இதை ஒட்டி சென்னை சூபர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி ஐபிஎல் 2018 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கு பெற்ற 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.    டில்லி டேர் டெவில்ஸ் அணி 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.