மும்பை

பிஎல் 2018ல் கிங் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக ஆர் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின் வீஅலியாடி வந்துள்ளார்.   தற்போது பஞ்சாப் அணியில் இருக்கிறார்.   இதுவரை அவர் 111  ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.   பஞ்சாப் அணியில் அஸ்வின் ரூ.7.6 கோடிக்கு ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது இந்த அணி தனது டிவிட்டர் பக்கத்தில் அஸ்வின் இந்த அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.  இதற்கு அணியின் மூத்த வீரரான வீரேந்திர சேவாக் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அஸ்வின், “என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   நான் 21ஆம் வயதில் இருந்தே விளையாடி வருவதால் எனக்கு தலைமைப் பொறுப்பு ஒரு சுமையாக இருக்காது.  மற்ற வீரர்களின் உதவியுடன் எனது தலைமைப் பொறுப்பை நன்கு நிறைவேற்றுவேன்.    நான் இந்த அணியின் தலைவராக இருப்பதில் பெருமை அடைகிறேன்”  எனக் கூறி உள்ளார்.