கொல்கத்தா:

பில் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து   களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

170 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முக்கிய போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வரும் இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் நிலையில் உள்ளது.

முதலில் மட்டையை பிடித்த  கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் எடுத்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 52 ரன்களும், ரஸல் 49 ரன்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியின் கவுதம், ஆர்ச்சர், லாஹ்லின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கோபால் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் அடுத்து சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன்  ராஜஸ்தான் அணி களமிறங்கி ஆடி வருகிறது.