புனே

நேற்று நடந்த ஐபிஎல் டி 20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

நேற்று ஐபிஎல் 2018 போட்டியின் லீக் ஆட்டம் புனே மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது.   டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழந்து 169 ரன்கள் எடுத்திருந்தது.    இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் ரெய்னா 75 ரன்களும், ராயுடு 46 ரன்களும் எடுத்திருந்தனர்.

அடுத்து 170 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு மும்பை அணி விளையாடத் தொடங்கியது.    அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தனர்.   சூரிய குமார் 44 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.   லீவிஸ் 47 ரன்களின் ஆட்டமிழந்தார்.    அணியின் தலைவர் ரோகித் சர்மா அரைசத்ம் எடுத்து வெற்றியை தேடித் தந்தார்.   20 ஓவர் முடிய 2 பந்துகள் பாக்கி இருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.

இந்தப் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றதாக அறிவிக்கப்பட்டது.