கொல்கத்தா

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ பி எல் 2018 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி வாகை சூடியது.

தற்போது ஐ பி எல் 2018 கிரிக்கெட் தொடர் போட்டிகள்  நடைபெறுகின்றன.   நேற்று மாலை 4 மணிக்கு மும்பையில் தொடங்கிய போட்டியில் டில்லி டேர் டெவில்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது தெரிந்ததே.

மற்றொரு போட்டி நேற்று இரவு கொல்கத்தாவில் நடைபெற்றது.   இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி மோதியது.

போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.    அதையொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கில் இறங்கியது    முதலில் சிறிதே தடுமாறிய கொல்கத்தா அணி அதிரடி ஆட்டத்தை தொடங்கும் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மழையின் போது கொல்கத்தா அணி 7 ஓவரில் 1 விக்கட்டை இழந்து 52 ரன்கள் எடுத்திருந்தது.   மழை நின்ற பின் போட்டி மீண்டும் தொடர்ந்தது.   கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 138 ரன்களுடன் இருந்தது

வெற்றி விலக்கான 139 ரன்களை எடுக்க ஐதராபாத் அணி அடுத்து களம் இறங்கியது. ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியை தோற்கடித்தது.    ஐந்து விக்கட் வித்யாசத்தில் ஐதராபாத் அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது