ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மும்பை, டெல்லி உள்ளிட்ட 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றன.

மொத்தம் 56 லீக் போட்டிகள் இன்றோடு முடிவடைந்துள்ள நிலையில், முதல் 4 இடங்களைப் பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

மொத்தம் 18 புள்ளிகளை வென்ற மும்பை முதலிடம் பெற்றது. 16 புள்ளிகளைப் பெற்ற டெல்லி இரண்டாமிடம் பெற்றது. ஐதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெற்றபோதும் ரன்ரேட் அடிப்படையில், ஐதராபாத் மூன்றாமிடமும், பெங்களூரு நான்காமிடமும் பெற்றன.

எனவே, மேற்கண்ட இந்த 4 அணிகளும் பிளே-ஆஃப் சுற்றுகளில் மோதவுள்ளன. நவம்பர் 5 முதல் 8ம் தேதி வரை பிளே-ஆஃப் சுற்றுகள் நடைபெறவுள்ளன.

கொல்கத்தா, பஞ்சாப், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள், முறையே, அடுத்த 4 இடங்களில் உள்ளன.