சென்னை: ஐபிஎல் 2021 சீசனுக்கான ஜெர்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிமுகப்படுத்தி உள்ளது.

2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஏப்ரல் 10ம் தேதி நடைபெறுகிறது.

இந் நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஜெர்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டு உள்ளது. அணியின் ஜெர்சியை கேப்டன் தோனி வெளியிட்டுள்ளார். வழக்கமான மஞ்சள் நிறத்துடன் தோள்பட்டையின் இரு பக்கத்திலும் ராணுவ உடையில் காணப்படும் பிரத்யேக தோற்றத்தில் ஜெர்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

3 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றுள்ளதை குறிக்கும் வகையில் கர்ஜிக்கும் சிங்கத்தின் லோகோவிற்கு மேலே 3 ஸ்டார்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.