சென்னை: இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், உச்சபட்சமாக தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16.25கோடிக்கு ஏலம் போயுள்ளார். அவரை ராஜஸ்தான் ராயல் அணி ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்தவொருவீரரும் இவ்வளவு ரேட்டுக்கு எடுக்கப்படாத நிலையில், முதன்முறையாக ராஜஸ்தான் அதிக விலை கொடுத்து மோரிஸை கைப்பற்றியுள்ளது.

அதுபேல, ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர் என்கிற தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் பெற்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து,  டேவிட் மலானை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. 

ஆஸி. வீரர் மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. சிஎஸ்கேவுடன் கடுமையாகப் போட்டியிட்டு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி தேர்வு செய்துள்ளது.

டேவிட் மலானை  ரூ. 1.50 கோடி கொடுத்து  பஞ்சாப் ஏலம் எடுத்துள்ளது. 

 

தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.