மும்பை:
ப்ரல் 2-வது வாரத்தில் 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டிகளை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 11 முதல் 14-ஆம் தேதிக்குள் ஐ.பி.எல். போட்டி தொடங்கப்படும் என்றும், ஜூன் முதல் வாரத்தில் ஐ.பி.எல் போட்டியை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ஐ.பி.எல். இறுதிப் போட்டி வரும் ஜூன் 6-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறலாம் என்றும் பெரும்பாலான போட்டிகளை மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.