ஜெய்ப்பூர்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

இதை தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.