மொகாலி:

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் கிறிஸ் கெய்ல் அடித்த விரைவு சதம் மூலம் பஞ்சாப் அணி 193 ரன்கள் எடுத்தது.

மொகாலியில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணி வீரர் லோகேஷ் ராகுல் (18) சுமாரான துவக்கம் தந்தார். கிறிஸ் கெய்ல் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி தள்ளினார். அதிவேகத்தில் ரன் சேர்த்த கெய்ல் 58 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். இது ஐ.பி.எல்.ல் இவரது 6வது சதமாகும்.

பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஐதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது.