டில்லி:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டில்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டில்லி அணி பேட்டிங் செய்தது, 20 ஓவர்கள் முடிவில் டில்லி அணி 4 விக்கெட்களை இழந்து 219 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 93 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது.