துபாய்: ஐபிஎல் இறுதிப்போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் மும்பை அணியின் டிரென்ட் பெளல்ட்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020 இறுதியாட்டத்தில், டெல்லியோடு மோதியது மும்பை. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

டெல்லியின் துவக்க வீரராக களமிறங்கினார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். மும்பை சார்பில் முதல் ஓவரை வீச வந்தார் டிரென்ட் பெளல்ட். அப்போது, தனது முதல் பந்திலேயே கீப்பர் கேட்ச் மூலமாக ஸ்டாய்னிஸை அவுட்டாக்கினார் பெளல்ட்.

இதற்கு முன்னர், ஐபிஎல் இறுதிப்போட்டியில், ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் எதுவும் விழுந்ததில்லை. தற்போது, அந்த சாதனை பெளல்ட்டுக்கு வந்துள்ளது. இவர், இத்தொடரில் மொத்தம் இத்தொடரில் 15 போட்டிகளில் ஆடி, 25 விக்கெட்டுகளை சாய்த்து, பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறார்.