துபாய்: இன்று துபாயில் நடைபெறும் ஐபிஎல் 29வது போட்டியில் சென்னை – ஐதராபாத் அணிகள் மீண்டும் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் மோதியப் போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில், துபாய் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் இரு அணிகளும் சந்திக்கின்றன. இந்தப் போட்டியிலாவது சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
ஐதராபாத் அணி கடந்தப் போட்டியில் ராஜஸ்தானிடம் தோற்றிருந்தது. எனவே, இன்றையப் போட்டியில் வெல்லும் முனைப்பை அந்த அணி வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.