கொல்கத்தா:

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 47வது ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்த்ரே ரஸ்செல்லின் அதிரடி ஆட்டத்தில்  34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு ஆட்டம் கொல்கதா நைட் ரைடர்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஈடன் கார்டமைதானத்தில் நடைபெற்றது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  இதையடுத்து கொல்கத்தா அணி மட்டையுடன் மைதானத்துக்குள் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மான் கில்லும் களம் புகுந்தனர்.

இந்த இணை முதல் ஓவரிலேயே  பரிந்தர் ஸ்ரன் வீசிய பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.  சுப்மான் கில், கிறிஸ் லின்னும் தொடர்ந்து அதிரடியாக ஆட, அணியின் ஸ்கோர் சரசரவென எகிறியது. இந்த ஜோடி 96 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ்லின் வெளியேறினார். அவர்  29 பந்தில் 2 சிக்சர், 8 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஆந்த்ரே ரஸ்செல் களமிறக்கப்பட்டார். அவரும் தனது அதிரடியான ஆட்டத்தை காட்ட அணியின் ஸ்கோர் பயங்கரமாக ஏறி வந்தது. இந்த நிலையில் சுப்மான் கில் வெளி யேறினார். அவர் 45 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சர் உடன்  76 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் வந்தார். ரஸ்செல் தனது வேட்டையை தொடர்ந்து வந்தார். மும்பை பவுலர்களின் பந்துகளை அனாயசமான அடித்து தூள் கிளப்பினார்.  ஹர்திக் பாண்ட்யா வின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய அவர், பும்ரா, மலிங்காவின் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. இந்த நிலையில், கொல்கத்தா அணி  20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்சமான ஸ்கோர் இதுதான்.

இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 80 ரன்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

அடுத்து 233 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய குயின்டான் டி காக் (0), கேப்டன் ரோகித் சர்மா (12 ரன்) வந்த வேகத்தில் வெளியேற ம்பை  ரசிகர்கள் .சோகமாகினர். இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். அவர்  17 பந்துகளில் 7 சிக்சருடன் அரைசதத்தை கடந்து ஆட்டத் தையே மாற்றினார்.

ஹர்திக்  பாண்ட்யா 34 பந்தில் 6 பவுண்டரி, 9 சிக்சர் 91 ரன்களில் கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்களே எடுத்தது.

இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.

கொல்கத்தா தரப்பில் ரஸ்செல், நரின், குர்னே தலா 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனான ஆந்த்ரே ரஸ்செல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பியூஸ் சாவ்லா 150-வது விக்கெட்

பியூஸ் சாவ்லாவுக்கு ஐ.பி.எல்.-ல் இது 150-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 3-வது பவுலர் ஆவார்.

ரஸ்செல் 50 சிக்சர் 

இந்த ஆட்டத்தன்  கொல்கத்தா வீரர் ஆந்த்ரே ரஸ்செல் (வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர்) நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 50 சிக்சர்களை (12 ஆட்டம்) அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஐ.பி.எல்.-ல் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2-வது வீரர் ரஸ்செல் ஆவார். ஏற்கனவே கிறிஸ் கெய்ல் இரண்டு முறை (2012-ம் ஆண்டில் 59 சிக்சர், 2013-ம் ஆண்டில் 51 சிக்சர்) இவ்வாறு சிக்சர் மழை பொழிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.