சண்டிகர்: நடப்பாண்டு (2021) ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற உள்ள நிலையில்,  நடிகை பிரித்தி ஜிந்தா பார்ட்னராக உள்ள கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பெயர், பஞ்சாப் கிங்ஸ் அணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஐபிஎல் 2021 போட்டில் 8 அணிகள் விளையாட உள்ளது. இதில் தமிழக சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் கேப்டனாக உள்ள  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும்  ஒன்று. இதுவரை நடைபெற்றுள்ள 13 ஐபிஎல் போட்டிகளில, பஞ்சாப்  அணி ஒருமுறை இறுதிப்போட்டி வரை சென்றுள்ள நிலையில், ஒருமுறை 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த நிலையில் நடப்பாண்டு, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பஞ்சாப் கிங்ஸ் என்ற பெயரில் களமிறங்குகிறது.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நெஸ் வாடியா, பிரீத்தி ஜிந்தா, மோஹித் பர்மன் மற்றும் கர்ன் பால் ஆகியோரை உரிமையாளர்களாகக் கொண்டுள்ளது. அணிக்கு, புதிய தோற்றத்தையும் புதிய உணர்வையும் சேர்க்க வேண்டும்” என்று விரும்பியதாலும்,  அணியின் பெயரை மாற்ற அணியின் பங்குதாரர் பர்மன் நீண்ட நாள்களாகப்  யோசித்து வந்த நிலையில், தற்போது பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும், இது திடீர் முடிவு அல்ல, இது தொடர்பாக ஒரு வருடமாக யோசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து, அது தொடர்பான புதிய லோகோ வெளியிடப்படும் என்றும்,  மாறிவரும் நெறிமுறைகளையும் பார்வையாளர்களின் சுவையையும் கருத்தில் கொண்டு  ஒரு முழுமையான புதிய புதுப்பிப்பைப் பெற வேண்டும் என்று பெயர் மாற்றப்பட்டு இருப்பதாக  பர்மன் தெரிவித்துள்ளார்.