ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்த நேரத்தில் பாகிஸ்தானின் மேற்கு எல்லையில் ஈரான் ராணுவம் பாகிஸ்தான் எல்லைகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.
eran
பாகிஸ்தான் ஈரானுடன் 900 கி.மீ தொலைவிலான எல்லைப்பகுதியை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தப்பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக கூறி ஈரான் ராணுவம்திடீர் தாக்குதலை நடத்தியது.
இந்தத் தாக்குதல் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் நடந்தது.
வீசப்பட்ட குண்டுகள் எல்லையோர கிராமம் ஒன்றில் விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
நல்லவேளையாக தாக்குதலில் உயிச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் படையினரும் திருப்பி தாக்கியதாக தெரிகிறது.