மோசூல் நகரில் வீரர்கள் கொண்டாட்டம்

மோசூல்

எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த மோசூல் நகரை ஈராக் ராணுவம் மீட்டதையொட்டி வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஐ எஸ் தீவிரவாதிகள்,  ஈராக் ராணுவத்திடம் இருந்து மோசூல் நகரைக் கைப்பற்றினர்.  அது முதல் மோசூல் நகர் ஐ எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.  அதை மீட்க ஈராக் ராணுவம் போராடி வந்தது.

தற்போது அமெரிக்க கூட்டுப்படை ஈராக் ராணுவத்தினருக்கு உதவி வருகிறது.   அந்த உதவியுடன், ஈராக் ராணுவத்தினர் ஐ எஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பல பகுதிகள மீட்டு வருகின்றனர்.

தற்போது மோசூல் நகரை ஐ எஸ் தீவிரவாதிகள்  மேல் அதிரடித் தாக்குதல் நடத்தி ஈராக் மீட்டுள்ளது.    மூன்று ஆண்டுகள் கழித்து மோசூல் நகரை மீட்டதால் மிக்க மகிழ்ச்சி அடைந்த ஈராக் ராணுவ வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.