புதுடில்லி: உங்கள் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை வாங்க நீண்ட வரிசையில் நின்ற காலம் மலையேறி விட்டது. சமீபத்திய தொழில்நுட்பத்தின் வருகையுடன், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) “பதிவு செய்யுங்கள் இப்போது, ​​ பணம் செலுத்துங்கள் அப்புறம்“(புக் நௌ பே லேட்டர்)  என்ற புதிய கொள்கையை கொண்டு வந்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது இந்த “ஈபே லேட்டர்” விருப்பத்தேர்வுடன் மிகவும் எளிதானதும் மற்றும் தொந்தரவில்லாமலும் இருக்கும்.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு “ஈபே லேடர்” சேவை கிடைக்கும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. தட்கல் டிக்கெட்டுகளை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் எந்தவொரு தாமதம் அல்லது கட்டண நுழைவாயில் தோல்விகளையும் சந்திக்க வேண்டியதில்லை என்பதால் இந்த விருப்பத்தேர்வு குறிப்பாக அவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

மின் டிக்கெட்டுகளை செலுத்துவதற்கான இந்த புதிய வசதி ஈபே லேட்டர் மூலம் கிடைக்கிறது. ஈபே லேட்டர் என்பது அர்த்தசாஸ்திரா ஃபிண்டெக் பிரைவேட் லிமிடெட் வழங்கும் டிஜிட்டல் கட்டண தீர்வாகும்.

பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்த 14 நாட்களுக்குள் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒருவர் 14 நாட்களுடன் தொகையை செலுத்தத் தவறினால், அவர் 3.50% வட்டி கட்டணம் மற்றும் பொருந்தக்கூடிய வரிகளை செலுத்த வேண்டும்.

“ஈபே லேட்டர்” விருப்பத்தேர்வைப் பயன்படுத்தி டிக்கெட்டை எவ்வாறு முன்பதிவு செய்யலாம் என்கிற வகிற விவரம் இதோ:-

1) ஐ.ஆர்.சி.டி.சி கணக்கில் உள்நுழைக

2) உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய பயண விவரங்களை உள்ளிடவும்.

3) கட்டண பக்கத்தில், ‘பின்னர் பணம் செலுத்து’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் இருக்கும்.

4) ‘பின்னர் செலுத்து‘ விருப்பத்தேர்வை கிளிக் செய்தால், நீங்கள் ஈபேலேட்டருக்கு திருப்பி விடப்படுவீர்கள்.

5) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஈபே லேட்டர் இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.

6) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP ஐப் பெறுவீர்கள். நீங்கள் OTP ஐ உள்ளிட்டதும் உங்கள் உள்நுழைவு வெற்றிகரமாக இருக்கும்.

7) உங்கள் முன்பதிவு தொகையை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.