பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டம் என ரேவா திட்டத்தை பற்றி மத்திய அரசு கூறியிருப்பதை காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருக்கிறது.
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ரேவா அல்ட்ரா மெகா சோலார் திட்டத்தினை பயன்பாட்டிற்கு பிரதமர் மோடி திறந்து துவக்கி வைத்தார். 750 மெகாவாட் மின்சார உற்பத்தியை சூரிய ஒளியிலிருந்த பெற முடியும் என அவர் கூறியிருந்தார்.
ஆசியாவில் மிகப்பெரிய சோலார் திட்டம் என்று இந்த திட்டம் பற்றி பாஜக தொடர்ந்து கூறி வந்தது. இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “அசத்யாகிராஹி” (‘சத்தியத்திற்கான போராட்டத்தை நம்பாத ஒருவர்’) என்று தமது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரசின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.
இந் நிலையில், தற்போது திறக்கப்பட்ட ரேவா சூரிய பூங்கா (750 மெகாவாட்) ஆசியாவின் மிகப்பெரியது என்று மத்திய அரசு எவ்வாறு கூற முடியும் என்பதற்கு மத்திய மின் அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட கர்நாடகாவில் உள்ள பாவகடா பூங்கா அதைவிட மிகப் பெரியது (2,000 மெகாவாட்) என்று காங்கிரசின் கர்நாடக பிரிவு தலைவரும், மாநில முன்னாள் எரிசக்தி அமைச்சருமான டி.கே.சிவகுமார் கேள்வியெழுப்பியுள்ளார். டுவிட்டரில் அவர் இதை தெரிவித்துள்ளார்.