டில்லி,

கோடிக்கணக்கான மக்கள்களை இன்னலுக்க்கு ஆளாக்கிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறச்செயலா என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தி ஓராண்டு நிறைவையொடி, காங்கிரஸ் உள்பட எதிக்கட்சிகள், இன்று கருப்பு தினமாக கூறி வருகின்றனர். ஆனால், ஆளும் பாஜகவோ,  கறுப்புப் பண ஒழிப்பு தினம் என அறிவித்து உளளது.

இந்நிலையில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ‘அற ரீதியிலான நடவடிக்கை, ஒழுங்குக்கான ஒரு முதல் அடிவைப்பு’ என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து சரமாரியாக விமர்சனங்களை எழுப்பி டுவிட் செய்துள்ளார்.

“பணமதிப்பிழப்பு அறரீதியான நடவடிக்கை என்கிறார் நிதியமைச்சர், கோடிக்கணக்கானோர் மீது துன்பத்தை ஏற்றுவதுதான் அறச்செயலா? குறிப்பாக 15 கோடி தினக்கூலிகள் பாதிக்கப்பட்டது அறச்செயலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஜனவரி-ஏப்ரல் 2017-ல் 15 லட்சம் வேலைவாய்ப்புகளை அழித்ததும், சிறு மற்றும் குறுந்தொழில்கள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டதும் அறமா?

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற எளிதான வழி ஏற்படுத்திக் கொடுத்ததுதான் அறமா?

சூரத், பிவாண்டி, மொராதாபாத், ஆக்ரா, லூதியானா மற்றும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களை சேதப்படுத்தி யது அறச்செயலா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்பு தினமான இன்று உண்மைச் சம்பவங்களை வாசிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கானோருக்காக பிரார்த்தனை செய்க.

பணசுழற்சியை செயற்கையாக குறைத்தது பொருளாதார வளர்ச்சியின்மைக்கும், தேவை குறைவானதற்கும் ஒரு காரணமாகும்.

“வெளிப்படைத்தன்மை நலன்களுக்காக ஆர்பிஐ வாரிய திட்டம், பின்னணி குறிப்பு, முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பு ஆகியவற்றை அரசு/ஆர்பிஐ வெளியிடுவது அவசியம்.

அரசு தன்னுடைய முடிவில் நம்பிக்கை கொண்டிருக்குமேயானால், இந்த ஆவணங்களை வெளியிட ஏன் தயக்கம்?”

மோடியின் இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை சேதமாக்கியுள்ளது என்று பிபிசி கூறுகிறது, பிபிசி என்ன ஊழல் மற்றும் கருப்புப் பண ஆதரவாளரா?

இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.