கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியத் துக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. வென்ட்டிலேட்டர் கருவியுடன் சிகிச்சை அளிப்பதுடன் எக்மோ சிகிச்சை யும் தரப்படுகிறது.அவர் உடல் நலம் அடைய சர்வதேச அளவிலான டாக்டர் களுடன் கலந்துரையாடல் நடத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை செய்தி சேனல் ஒன்றில்.’எஸ்பி பி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது இன்று நுரையீரலில் அவருக்கு ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதுடன் இதய துடிப்பும் மெதுவாக குறைந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த தகவலை மருத்துவ வட்டாரம் மறுத்ததுடன் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்தது.
முன்னதாக எஸ்பிபி உடல் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலகினர் ரசிகர்கள் இணைந்து நேற்று மாலை கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.