வாஷிங்டன்:

ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின்  தலைவன் பக்தாதி மரணத்தை தழுவினான் என்று அமெரிக்க அதிபர்  டிரம்ப் அறிவித்து உள்ளார்.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சிரியா அரசுக்கு எதிராக செய்லபட்டு, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்த அமைப்புக்கு தலைவராக அபுபக்கர் அல் பக்தாதி இருந்தார். இந்த அமைப்பு உலகம் முழுவதும் பல இடங்களில்  குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களை நடத்தி வந்தது. அதுபோல, மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த அமைப்பினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில், ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்க உள்பட பல நாடுகள் ஒழித்து கட்சி வருகிறது. சமீபத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவின் பரிஷா பகுதியில் பக்தாதி மறைந்திருந்த ஒரு வீட்டை முற்றுகையிட்டு குண்டுமழை பொழிந்தபோது, அவன் சிக்கி உயரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதி நாயைப் போல மரணத்தை தழுவினான் என்றும் அவன் ஒரு கோழையைப் போல் அழுதபடி உயிரிழந்தான் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியட்ட டிவிட்டர் பதிவில்,  மிகப்பெரிய விஷயம் ஒன்று நடைபெற்றுள்ளது.  அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவின் பரிஷா பகுதியில் அவன் மறைந்திருந்த ஒரு வீட்டை முற்றுகையிட்டு குண்டுகளை வீசிய போது உயிருக்கு அஞ்சி கதறி அழுத பக்தாதி ஒரு கோழையைப் போல தப்பி ஓட முயற்சித்ததாகவும் சுரங்கம் வழியாக தப்ப முயற்சித்ததாகவும் அது நிறைவேறாததால் தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து தமது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அபுக்கர் பக்தாதி கொல்லப்பட்ட தகவல் உலகம் முழுவதும் ஊடகங்களில் கசிந்தது. இதனை உறுதி செய்த டிரம்ப் அபுபக்கர் பக்தாதி ஒருநாயைப் போல் கொல்லப்பட்டான் என்று அறிவித்தார்.

அல்பக்தாதியால் மனித குலத்திற்கு இனி எந்த வித அச்சுறுத்தலும் இருக்காது. உலகம் இப்போது பாதுகாப்பான இடமாகி விட்டது  என்றும் டிரம்ப் தெரிவித்தார்.