புதுடெல்லி:

பிரதமர் மோடி நாட்டை ஆள்கிறாரா அல்லது பப்ஜி விளையாடுகிறாரா? என அகில இந்திய மஜ்லிஸ்–இ-இட்டாஹதுல் முஸ்லிமீன் தலைவர் அஸாதுதீன் ஓவாய்ஸி கேள்வி எழுப்பியுள்ளார்.


பிரதமர் மோடி அவரது விமானப் படையை அனுப்பி பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்தார் என பாஜக தலைவர் அமீத்ஷா சமீபத்தில் பேசினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓவாய்ஸி, மோடி ராணுவம், மோடி விமானப் படை, மோடி அணு ஆயுதம் என, மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு எந்த நிலைக்கு போயிருக்கிறது பிரதமர் மோடி நாட்டை ஆள்கிறாரா அல்லது பப்ஜி விளையாடுகிறாரா? என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.