த்து வயது சிறவனை துள்ளத்துடிக்க கழுத்தை அறுத்துக் கொன்று அந்த காட்சியை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள்.
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை ஆக்கிரமித்து, அதை  இஸ்லாமிய நாடாக  அறிவித்திருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பல்வேறு கொடூர செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சிரியா நாட்டின் அலெப்போ என்கிற பகுதியில் 10 வயது சிறுவனின் தலையை துண்டித்து படுகொலை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
1
சிரியாவின் அரச படைகளுக்கு ஆதரவாக அந்த சிறுவன் உளவு பார்த்ததாக சொல்லி, இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளார்கள்.
வீடியோ காட்சியில் முதலில்  அந்த சிறுவனை பிடித்து கன்னத்தில் சரமாரியாக அறைகின்றனர். அவன் வலி தாங்காமல் கதறுகிறான். பிறகு, அவனது கைகளை கட்டி டிரக்கின் பின்புறத்தில் படுக்க வைக்கிறார்கள். அடுத்ததாக அவனு மரண ஓலத்தை பொருட்படுத்தாமல்  அவனது கழுத்தை நிதானமாக அறுக்கிறார்கள். இதை சுற்றிலும் இருக்கும் இதர ஐ.எஸ்.. பயங்கரவாதிகள் ரசித்து பார்ப்பதுடன், ஆரவாரமாக கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்.
இந்த வீடியோவை பார்க்கும்போதே பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது.