சென்னை:

விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது, விதி மீறல், ஓட்டுனர் உரிமம் போன்ற போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு, போக்குவரத்து காவல்துறையினரால் விதிக்கப்படும் அபராதக் கட்டணம் இன்றுமுதல் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. உச்சநீதி மன்ற நீதிபதி சந்திரசூட் இந்த ஆன்லைன் புதிய வசதியை இன்று தொடங்கி வைக்கிறார்.

சாலை விதிகளை மீறுவோர், தலைக்கவசம் அணியாமல் செல்வது, சிக்னலை மீறுவது , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் செல்வது, குடித்துவிட்ட வாகனத்தை ஓட்டுவது, குறிப்பிட்ட பகுதியில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்ளுக்கு ஆளாகும் வாகன ஓட்டிகளை, போக்குவரத்து காவல்துறை யினர் மடக்கி அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த அபராதம் காவல்துறையினரானல் இ-சலான் முறையில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும் நேரில் சென்று கூட செலுத்தலாம்.
‘இந்த நிலையில், நீதிமன்றங்களுக்கு நேரில் செல்லாமல், ஆன்லைன் மூலமாக அபராதம் செலுத்தும் திட்டத்தை, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, டி.எஸ்.சிவஞானம் தலைமையில், கணினி குழு ஒன்றை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், சாலை விதிமீறலில் ஈடுபடுவோரின் வாகன எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் விர்சுவல் கோர்ட்ஸ் என்ற இணையதளத்தில் பதிவிட்டு, பின்னர் வாகன ஓட்டிகளின்  மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். அதன்படி, அபராத தொகையை, ஆன்லைனில் செலுத்தலாம்.
சென்னையில், இந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்ற இ-கமிட்டி தலைவராக உள்ள நீதிபதி சந்திரசூட், டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

ஏற்கெனவே டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் அபராதத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வசதி ஏற்படுத்தும் வகையில் விர்ச்சூவல் எனப்படும் மெய்நிகர் நீதிமன்றங்களை தொடங்க உத்தரவிட்டார். தற்போது, தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் மெய்நிகர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார்.