போபால்: உங்கள் குடும்பத்தில் யாராவது சுதந்திர போராட்ட வீரர் இருக்கிறாரா? பிரதமர் மோடிக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இளைஞர்கள், விவசாயிகளை பற்றி மோடி எங்கேயாவது பேசியிருக்கிறாரா? ஆனால் அவர்கள் தேசப்பக்தியை பற்றி எங்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர்.

உங்கள் குடும்பத்தை மறந்துவிடுங்கள், சொல்லுங்கள்.. உங்கள் குடும்பத்தில் யாராவது சுதந்திர போராட்ட வீரர் இருக்கிறாரா? உங்கள் சொந்த பந்தங்களில் யாராவது உள்ளனரா?

என்ஆர்சி பற்றி பேசுகிறீர்கள்? அதன் விரிவாக்கம், அர்த்தம் என்ன? நீங்கள் பதிவுக்குச் செல்லும் போது அவர்கள் உங்கள் மதம் என்ன என்று கேட்பார்கள்? உங்கள் தந்தையின் மதம் என்ன? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.