ராயல்டி பிரச்சினையால் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி.க்கும் இடையே நடந்த பிரச்சனையால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இளையராஜாவைப் பற்றி தான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலுமே உயர்வாகப் தான் பேசிவந்தார் எஸ்.பி.பி.

இந்நிலையில் இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழா, படுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.ஜூன் 2-ம் தேதி ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் ஒத்திகைக்காக இன்று (மே 27) இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு எஸ்.பி.பி. வந்துள்ளார். இருவருமே தங்களுடைய நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.

இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, ‘The Duo is Back’ எனப் பதிவிட்டு வருகின்றனர்.