கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 19-ம் தேதியிலிருந்து தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் தினசரித் தொழிலாளர்கள், நலிந்த நடிகர்கள் உள்ளிட்ட பலரும் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இன்று ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலனின் 33-வது நினைவு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் தந்தையின் நினைவு நாளில் ஆயிரம் நலிந்த நாடக நடிகர்களுக்கு அறுசுவை உணவும், புத்தாடைகளும் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ஐசரி கணேஷ்.
இந்நிலையில் இந்த வருடம் பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்குப் போராடுவதால் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். எப்படியென்றால் 2500 கலைஞர்களுக்கு 1000 ரூபாய் விதம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார் ஐசரி கணேஷ்.