காபூல்:
ஈராக், சிரியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு குடிபெயரும் ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஆசிய நாடுகளுக்கு ஆபத்து ஏற்படாலம் உளவுத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஈராக், சிரியாவில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தங்களது கூடாரத்தை ஆப்கானிஸ்தானுக்கு மாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என உளவுத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஐ.எஸ் பயங்ரவாதிகளுக்கு தற்போது சொந்தமாக தனியிடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக சிரியா மற்றும் ஈராக்கின் முக்கிய பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து ஐ.எஸ் தனியாக ஆட்சி செய்து வந்தது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கைகளால் கடும் பின்னடைவை சந்தித்துள்ள ஐ.எஸ் பயங்ரவாதிகள் தற்போது ஆப்கானிஸ்தான் நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் பயங்கரவாத செயல்கள் அவ்வப்போது தலைதூக்கி வருகிறது. இந்த வாய்ப்பை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் முகாமிட திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.