பனாஜி: ஐஎஸ்எல் ஏழாவது சீசன் கால்பந்து தொடரில், லீக் போட்டியொன்றில், சென்னை – மும்பை அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

ஆட்டம் தொடங்கிய 21வது நிமிடத்தில், மும்பை வீரர் ஓபெசே ஒரு கோலடித்து, தனது அணிக்கு முன்னிலைப் ப‍ெற்று கொடுத்தார். அதன்பிறகு உடனடியாக கோல்கள் எதுவும் அடிக்கப்படாததால், முதல் பாதி ஆட்டத்தில் மும்பை அணி முன்னிலையுடன் இருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியப் பிறகு, 75வது நிமிடத்தில், சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாகப் பயன்படுத்திய சென்னை அணியின் இஸ்மாயில் ஒரு கோலடிக்க, ஆட்டம் 1-1 என்று சமன் ஆனது.

அதன்பிறகு, கோலடிப்பதற்கு இரு அணியினரும் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. எனவே, இறுதியில் 1-1 என்ற சமனில் முடிந்தது போட்டி.

சென்னை அணியைப் பொறுத்தவரை, இதுவரை ஆடிய 14 போட்டிகளில், 3 வெற்றி, 7 டிரா மற்றும் 3 தோல்விகளுடன், புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. ஏற்கனவே ஐஎஸ்எல் கால்பந்து சாம்பியன் பட்டத்தை 2 முறை சென்னை அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.