பனாஜி: மும்பை – ஈஸ்ட்பெங்கால் அணிகள் மோதிய ஆட்டத்தில், 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது மும்பை அணி.

ஆட்டம் துவங்கிய 20வது நிமிடத்தில், மும்பை அணியின் ஆடம் லே பான்ட்ரே முதல் கோலடித்தார். இந்நிலையில், முதல் பாதி ஆட்ட முடிவில், மும்பை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய பிறகு, 48வது நிமிடத்தில் மும்பையின் பான்ட்ரே, பெனால்டிக் வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு கோடித்து அசத்தினார். மேலும், 58வது நிமிடத்தில் ‘ஃப்ரீ கிக்’ வாய்ப்பில் மும்பையின் ஹெர்னர் ஒரு கோலடிக்க, 3-0 என்று வலுவான முன்னிலைப் பெற்றது மும்பை அணி.

ஆனால், என்னதான் முயன்றாலும், ஈஸ்ட் பெங்கால் அணியால் ஒரு கோலும் அடிக்க முடியவில்லை. இறுதியில், வெற்றியானது 3-0 என்ற கோல் கணக்கில் மும்பை வசமானது.