சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’.படத்தின் காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் இப்படத்திற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர்.

வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தால் படத்தை வெளியிட முடியாமல் போனது . இந்நிலையில் விமல் மற்றும் சிங்காரவேலன் நேரில் சந்தித்து பிரச்சனையை பேசி தீர்த்து கொண்டனர்.

2019 ஆம் ஆண்டிற்குள் சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாதம் கடிதம் கொடுத்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.

இதனால் களவாணி – 2 படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியிருக்கிறது.