15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்திருந்தார் த்ரிஷா. அவர் காதல் வாழ்க்கை மட்டும் எதோ தடங்கல் வந்த வண்ணமே இருந்தது.

ராணாவை காதலித்தார் பின் அக்காதல் பிரிவுக்குப் பிறகு சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனை காதலித்தார். நிச்சயதார்த்தம் வரை சென்ற நிகழ்வு கருத்து வேறுபாட்டால் முறிந்தது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் “உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?” என்று கேட்டதற்கு, “சிங்கிள் பட் டேக்கன்” என்று திரிஷா பதில் கூறியிருக்கிறார். இது அனைவரையும் கேள்வி குறியாக்கியுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, “தனது மனதுக்கு பிடித்தவரை பார்த்தால், உடனே திருமணம் செய்துக்கொள்வேன்” என்று திரிஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.