டில்லி,

ந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன் என தமிழில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஜல்லிக்கட்டுக்காக அமைதியுடன் போராட்டத்தை தொடருங்கள் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே தமிழக இளைஞர்களின் அமைதியான அகிம்சை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.