புதுடெல்லி: அர்ஜுனா விருது தனக்கு கிடைத்தது ஒரு பெருமைக்குரிய தருணம் என்றுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா.

இந்தாண்டு அர்ஜுனா விருதுக்கு, இஷாந்த் ஷர்மாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், விருதுக்காக அவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவர் இதுவரை 97 டெஸ்ட், 80 ஒருநாள் மற்றும் 14 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்த விருது அறிவிப்பு குறித்து அவர் கூறியுள்ளதாவது, “கடந்த 13 ஆண்டுகளாக கடினமாகப் போராடியள்ளே. அர்ஜுனா குறித்த செய்திளை அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. நானே எனக்குள் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

என் மனைவி பிரதிமா சிங்கிற்கும் இதனால் பெரிய உற்சாகம். ஏனெனில், இந்த கெளரவம் எனக்கு கிடைக்க வேண்டுமென்பது அவரின் ஆசை. இத்தருணம், எனக்கும் எனது குடும்பத்திற்கும் பெருமைப்படத்தக்க ஒன்று” என்றுள்ளார் இஷாந்த்.