புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருவதுதான் மிகப்பெரிய வெகுமதி என்றுள்ளார் அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே.

ஆஸ்திரேலியாவின் முதல் ஜானி முல்லாக் விருதை வென்ற ரஹானே கூறியுள்ளதாவது, “நாங்கள் பெற்ற அனைத்துவித ஆதரவு மற்றும் அன்புக்கு எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.

கிரிக்கெட்டை விரும்பும் இந்திய ரசிகர்களின் முகத்தில் புன்னகையைக் கொண்டுவரும் திறனோடு இருப்பதுதான் மிகப்பெரிய வெகுமதி. உங்களின் பேராதரவு மற்றும் நல்வாழ்த்துக்களை நாங்கள் எப்போதும் எதிர்பார்க்கிறோம்.

அடுத்துவரும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெல்வதற்கு நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம்” என்றுள்ளார். ரஹானேவின் பெயர், மெல்போர்ன் மைதானத்தின் கெளரவப் பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.