காஞ்சிபுரம்,

சென்னை அருகே உள்ள மகேந்திராசிட்டியில் பெரும்பாலான  ஐடி கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில்  வேலை செய்துவந்த ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளைஞர் உயிரிழந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஊழியரின் பெயர் இளையராஜா என தெரியவந்துள்ளது. இவர்  இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதன அறிக்கைக்கு பிறகே உண்மை தெரிய வரும் என்றும் கூறினார்.

இளையராஜா மரணம் குறித்து சக ஊழியர்களிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இளையராஜாவின் மர்ம மரணம் இன்போசிஸ்ச ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.