சென்னை,

பிரபல எண்ணை நிறுவன தயாரிப்பு நிறுவனமான காளீஸ்வரி நிறுவனத்தில் 4வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரி எய்ப்பு செய்ததாக கடந்த 17ந்தேதி வருமான வரிதுறை அதிகாரிகள் காளீஸ்வரி நிறுவனத்துக்கு சொந்தமான 54 இடங்களில் அதிரடி சோதனையில் இறங்கினர்.

சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான 54 இடங்களில், 500க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர், உள்ளிட்ட 54 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

பல ஆண்டுகளாக முறையான வருமானவரி தாக்கல் செய்யவில்லை என்று ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.

இன்றுடன் 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 27 இடங்களில் சோதனை முடிந்துள்ளது என்றும் மேலும் 19 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.